head

indian sands | TNPSC | AR-03

இந்தியாவின் மண்  வகைகள் :


1.வண்டல் மண் 
2.கரிசல் மண் 
3.செம்மண் 
4.சரளை மண் 
5.மணல் மண் 

வண்டல் மண் :


  • ஆற்றுப்படுகைகள்  வெள்ளப் பேருக்கு சமவெளி 
  • டெல்டா மற்றும் கடற்கரை  சமவெளி  போன்ற பகுதிகளில்  ஆறுகளால் பாடிய வைக்கின்ற  பதிவுகளே வண்டல் மண்.
  • காதர் என்பது புதிதாக படிய வைக்கப்பட்ட வண்டல் மண் .

இது ஆற்றங்கரைக்கு அருகிலேயே  ஆண்டுதோறும்  நீரினால்  கொண்டு வரப்படும் படிவுகளினால்  வருவன தாகும்.
பாங்கர் என்பது  பழைய வண்டல் மண் படிவங்களாகும்.
ஆற்றங்கரைக்கு  சற்று தொலைவில்  இருக்கும்.
பயிரிடப்படும் பயிர் வகைகள் :

  • நெல், கோதுமை ,கரும்பு ,வாழை , பருத்தி  எண்ணெய்  வித்துக்கள்  பயிரிடப்படுகிறது .
  • கங்கை  பிரம்மபுத்ரா  சமவெளியில் சணல் பயிரிடப்படுகிறது.
  • பஞ்சாப் , ஹர்யான, உத்திரப் பிரதேசம் , பீகார் ,மேற்கு  வங்காளம் , தென்னிந்தியாவில் கிருஷ்ணா ,கோதாவரி,  மகாநதி ,காவிரி  ஆற்று  சமவெளிகள்  காணப்படுகின்றன.


2.கரிசல் மண் :
தீப்பாறைகள் சிதைவுருவதால் உருவாகிறது. கோதாவரி ,நர்மதா ,  தபதி  ஆற்றுப் பள்ளத்தாக்கு களில்  காணப்படுகிறது. கருப்பு நிறம் முதல் பழுப்பு நிறம் வரை  காணப்படுகின்றன.
தாதுக்கள்; பொட்டாசியம் , இரும்பு , சுண்ணாம்பு , அலுமினியம்,கால்சியம் , மெக்னீசியம்  கார்பனேட்டுக்களை பெற்றுரிக்கும்.
பற்றாக்குறை :
நைட்ரஜன்  மற்றும் பாஸ்போரஸ்  .
  விளைவிக்கப்படும் பயிர்கள்;

  • பருத்தி 
  • புகையிலை 
  •  கடுகு 
  • சூரியகாந்தி 
  • கரும்பு 
  • நெல் 
  • கோதுமை மற்றும் 
  • திணை  வகைகள் .
காணப்படும்  மாநிலங்கள் :
  • மகாராஷ்டிரா 
  • குஜராத் 
  • மத்தியப் பிரதேசம் 
  • ஆந்திரா  மற்றும் 
  • தமிழ்நாடு .

3. செம்மண் :

படிகப்பாறைகள்  மற்றும் உருமாறியப் பாறைகள்  சீதை வுருவதால்  செம்மண்  உருவாகிறது .

கனிமங்கள் :
  • இதில் இரும்பு ஆக்ஸைட் அதிகம் உள்ளதால்  சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

  • ஈரப்பதத்தைத்  தக்க வைத்துக்கொள்ள  இயலாதவை நைட்ரஜன், பாஸ்பரஸ்சத்துக் குறைவாகவே  இருக்கும்.

பயிரிடப்படும் பயிர்கள்:
  • கோதுமை 
  • நெல் 
  • பருத்தி 
  • கரும்பு 
  • எண்ணெய் வித்துக்கள் 
  • பருப்பு வகைகள் 

காணப்படும் மாநிலங்கள்:
  • தமிழ்நாட்டின்  பெரும் பகுதி,
  • கர்நாடகாவின்  தென்பகுதி ,
  • கோவா,
  • வடகிழக்கு ஆந்திரா ,
  • மத்தியப் பிரதேசம்  மற்றும் 
  • ஓடிசா .

4.சரளை மண் :

  • வெப்பமண்டல பருவக்காற்று  காலநிலையில்  உருவாகின்றன .
  • தீபகற்ப பீட பூமியில்  பெருமளவு  காணப்படுகிறது.
  • அதிக வெப்பமும்  மற்றும்  அதிக  மழையும்  மற்றும்  வறண்ட  கால நிலை  கொண்ட  பகுதிகளில்  சரளை மண்  உருவாகிறது.


கனிமங்கள் :

  • சிலிக்கா வேதிவினையால்  நீக்கப் படுகின்றது.
  • இரும்பு ஆக்ஸைட்  இருப்பதால்  சிவப்புநிறம் கொண்டதாக  காணப்படுகிறது.

பயிரிடப்படும் பயிர் வகைகள்:

  • காஃபி
  • தேயிலை 
  • ரப்பர் 
  • முந்திரி 
  • மரவள்ளி ,
காணப்படும் இடங்கள் :.
  • மேற்கு மற்றும் கிழக்கு  தொடர்ச்சி  ,மலைச் சரிவுகளில் .


5.மணல் :
  • வறண்ட  பாலைவன மண்  வடமேற்கு  இந்தியாவில்  ராஜஸ்தான் குஜராத் (கட்ச் )  மற்றும்  தெற்கு  பஞ்சாப்  ஆகிய பகுதிகளில்  காணப்படுகின்றது .
  • :நீர்ப்பாசன  வசதியுடைய இடங்களில்   பார்லி  ,நெல் போன்றவைகள்  காணப்படுகின்றன.



you want pdf copies click THIS :....TNPSC

BODY